Pastoral Visit
(From April 2008 Inter Nos)
ஆயரின் பங்குத் தளச் சந்திப்பு
முன் தயாரிப்பு
ஆயர் தொடர்பானவை
1. ஆயரின் பங்குத் தளச் சந்திப்பு (பங்கு விசாரணை) ஆன்மீக அருள் வாழ்வை மக்கள் மனங்களில் தூண்டுவதையும் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை அடிப்படையிலிருந்து அறிவதையும் ஆயருக்கும் மக்களுக்குமிடையே புரிதலையும் உறவையும் வளர்ப்பதையும் இலக்காகக் கொண்டு அமைய வேண்டும்.
பங்குத்தந்தை தொடர்பானவை
1. ஆயரின் பங்குத் தளச் சந்திப்பு பற்றிய தகவல் சுமார் 2 மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து பங்குத் தளச் சந்திப்பின் நோக்கம், முக்கியத்துவம் பற்றி அன்பியங்கள், பங்கு மேய்ப்புப்பணி பேரவை (பங்குப் பேரவை), நிதிக்குழு, பணிக்குழுக்கள், கிறிஸ்தவ வாழ்வுச் சமூகங்கள் (பக்த சபைகள்) அனைத்துக்கும் தகுந்த பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.
2. ஆயரின் பங்குத் தளச் சந்திப்பு ஓர் ஒப்புரவின் காலமாக அமைய ஆயர் வருகைக்கு முன் பங்கில் நிலவும் பிரச்சினைகள், மனத்தாங்கல், பகைமை போன்றவை இருந்தால் அவை நீங்கி நல்லதோர் சூழல் உருவாக பேச்சு வார்த்தைகள், சமரச முயற்சிகள் நடத்தப்பட வேண்டும்.
3. குடும்ப நலம், பொதுநிலையினர் பணிக்குழு மேலும் பிற அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் குடும்பங்களில் உள்ள உறவுப் பிரச்சினைகளை அகற்றி குடும்பங்களில் நல்ல உறவு நிலை உருவாக்க வேண்டும்.
4. கத்தோலிக்க முறைப்படி திருமண அருளடையாளத்தைப் பெறாத தம்பதியர்களைச் சந்தித்து, அது திருச்சபை முறைப்படி சரிப்படுத்தக்கூடியதாயின் ஆயர் சந்திப்புக்கு முன் அத்திருமணங்கள் திருச்சபை முறைப்படி சரிப்படுத்தப்பட வேண்டும்.
5. பங்கில் கிறிஸ்தவ வாழ்வு மறுமலர்ச்சியடையவும், இறைமக்களின் அருள்வாழ்வை ஆழப்படுத்தவும் ஆயர் சந்திப்புக்கு முன் மூன்று நாட்களாவது தியான மறையுரைகள், நற்செய்திக் கூட்டங்கள், சிந்தனைப் பகிர்வுகள், ஜெப அனுபவங்கள் பரிந்துரைக்கப்படுகிறது.
6. நன்றாகத் தயாரிக்கப்பட்டு (ஒப்புரவு அருளடையாளம்) அருள்வாழ்வின் ஆழப்படுத்தலுக்கு மிகவே உதவிடும். ஆயரின் சந்திப்புக்கு முன் கொண்டாடப்பட வேண்டும்.
7. ஆயர் பங்குத் தளச் சந்திப்பின் போது நடைபெறும். உறுதிப்பூசுதல் அருளடையாளக் கொண்டாட்டத்திற்குத் தகுந்த தயாரிப்பு அவசியம். தகுதியுள்ள மறைக்கல்வி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து உறுதிப்பூசுதல் பெறுவோருக்குரிய மறைக்கல்வியைப் பயிற்றுவிக்க வேண்டும்.
8. உறுதிப்பூசுதல் வழிபாடுகளைப் பற்றிய பயிற்சி பொது மக்களுக்கும் உறுதிப்பூசுதல் பெறுவோருக்கும் கொடுக்கப்பட வேண்டும்.
9. உறுதிப்பூசுதல் அருளடையாளக் கொண்டாட்டங்களில் வழங்கப்படும் காணிக்கை, குருமாணவர் நிதியில் சேர்க்கப்படுவதால் தாராளமாகக் கொடுக்க அறிவுறுத்த வேண்டும்.
10. பங்குத் தளச் சந்திப்பின் போது ஆயரின் பார்வைக்குப் பின்வரும் பதிவேடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
1) திருமுழுக்குப் பதிவேடு
2) உறுதிப்பூசுதல் பதிவேடு
3) முதல் திருவிருந்துப் பதிவேடு
4) திருமணப் பதிவேடு
5) திருமண வார்த்தைப்பாடு பதிவேடு
6) திருமண அறிவிப்புப் பதிவேடு
7) இறந்தோர் பதிவேடு
8) திருப்பலி பதிவேடு
11. பங்கில் பராமரித்து வரும் பின்வரும் ஆவணங்களையும், கோப்புகளையும், விபரங்களையும் ஆயர் பார்வைக்காக ஒழுங்குபடுத்தி வைக்க வேண்டும்.
1) பங்கு கணக்கு புத்தகம்
2) பங்கு சொத்துக்களின் பத்திரங்கள், பட்டா மற்றும் விபரங்கள்
3) பங்கில் உள்ள அசையும் ஃ அசையா சொத்துக்கள் விபரங்கள்
4) பங்கு மேய்ப்புப் பணிக்குழு (பங்குப் பேரவை) உறுப்பினர் பட்டியல், அனுமதிப் படிவம் மற்றும் அறிக்கை ஏடு, ஆண்டுத் திட்டம்.
5) அன்பியங்கள் விபரம்
6) 15 பணிக்குழுக்களின் தகவல், அஞ்சல் தொடர்புகள் வைத்துள்ள 15 கோப்புகள்
7) கிறிஸ்தவ வாழ்வுச் சமூகங்கள் (பக்த சபைகள்), இயக்கங்கள் சார்ந்த ஏடுகள்
8) பங்கு நாள் குறிப்பேடு
9) ஆயரின் சுற்றுமடல், அறிக்கைகள், செய்திமடல்
10) திருமணம் தொடர்பான படிவங்கள், திருமணத்திற்கு முன் ஆய்வு, (பறை) மன்னிப்பு, திருமணத் தடை விலக்கீடு, செல்லாத் திருமண அறிக்கை, தடையின்மைக் கடிதங்கள்
(Nihil Obstat) திருமண கட்டளை பேராண்மை (delegation) குறிப்புகள்.
11) ஞாயிறு அறிவிப்பு ஏடு
12) பள்ளிக்கூடம் ஃ கல்வி சம்மந்தமான கோப்புகள், மூப்புப்பட்டியல் புள்ளி விபரங்கள்
13) Pசழதநஉவ சம்பந்தமான கோப்புகள்
14) பங்கின் ஆண்டு புள்ளி விபரங்கள், பங்கின் வரைபடம்
15) குடும்பக் கையேடு ஃ குடும்ப வரி பதிவேடுகள்
16) அரசு ஃ நீதிமன்றத் தொடர்புகள்
17) கிளைப்பங்கு சம்பந்தமான கோப்புகள்.
12. ஆயருக்கு ஆடம்பரமற்ற, ஆரவாரம் இல்லாத ஆனால் அன்புணர்வுடன் கூடிய வரவேற்பளித்தல் போதும்.
13. மக்களையும் குழுக்களையும் ஆயர் சந்திக்கின்ற போது, பங்குத்தந்தையின்றி சந்திப்பு நடந்தால், மக்கள் திறந்த மனதுடன் கருத்துப் பகிர, செயல்பட வாய்ப்பாக அமையும்.
பங்கைப் பற்றிய விவரங்கள்:
பங்கின் பெயர் :
பங்கின் பாதுகாவலர்:
பங்கு தொடங்கப்பட்ட நாள் :
பங்குத்தந்தையர்கள் விவரம் :
தொலைபேசி எண் :
துறவியர் இல்லத்தின் பெயர் :
துறவியர் எண்ணிக்கை :
மொத்த மக்கள் தொகை :
கத்தோலிக்க மக்கள் தொகை:
பள்ளிகளின் பெயர் :
ஆசிரியர்கள் விவரம் : பெண்கள் ……………………….ஆண்கள் ……………….
படிக்கும் மாணவர்களின் விவரம் : பெண்கள் ……………………….ஆண்கள் ……………….
பங்கிலிருந்து இறை அழைப்பு பெற்ற தந்தையர்கள் ……………….துறவியர்கள்……………..
கிளைப்பங்கு பற்றிய விவரங்கள்
(மேலே காண்பது போல்)
ஆய்வுக்குழு தொடர்பானவை
1) ஆயரின் தளச் சந்திப்புக்கு முன் பங்கு பற்றி எல்லா நிலையிலும் ஆய்வு செய்து ஆயருக்கு அறிக்கை கொடுக்கப்பட வேண்டும். அதற்காக ஒரு குழு அனுப்பப்பட வேண்டும்.
2) பங்குத் தளச் செயல்பாட்டை ஆய்வு செய்யும் குழுவில் மறைமாவட்ட தலைமைச் செயலர், மறைமாவட்ட பொருளாளர், பணிகள் ஒருங்கிணைப்பாளர், வட்டாரத் தந்தை ஆகியோர் இடம்பெற வேண்டும்.
பங்குத் தளச் சந்திப்புக்குப் பின் நடைமுறைப்படுத்த வேண்டியவை
பங்குத் தளச் சந்திப்பு நல்ல பலன் தர தொடர் செயல்பாடுகள் தேவை. அதற்குக் கீழ்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுவோம்.
1) ஆயரின் பங்குத் தளச் சந்திப்பு முடிந்தபின் நேரடியாகவோ கடிதம் வழியாகவோ பங்கினைப் பற்றிய ஆயரின் பார்வை மற்றும் திறனாய்வுப் பரிந்துரைகளும் தரப்படும். பங்கு மேய்ப்புப் பணிக்குழுவும், பங்கு நிதிக்குழுவும், அன்பியங்களும், அருள்பணிக்குழுக்கள் மற்றும் கிறிஸ்தவ வாழ்வுச் சமூகங்களும் (பக்த சபை) ஆயரின் வழிகாட்டுதலைக் கருத்தில் கொண்டு தொடர் செயல்பாட்டுக்கு வழிவகுக்க வேண்டும்.
2) வட்டார முதன்மைப் பணியாளருடன் (வட்டார அளவிலான) ஆயரின் பங்குத் தளச் சந்திப்புக் குழு பங்குத் தளத்தைச் சந்தித்து தொடர் செயல்பாடுகள் குறித்துப் பரிந்துரை வழங்கும். மேற்படி தொடர் நடைமுறைகள் நிறைவாக்கப்பட்டுள்ளனவா என்று ஆய்வு நடத்தும்.
இயேசு கிறிஸ்துவின் வருகையினால் பூமியின் முகம் புதுப்பிக்கப்பட்டதுபோல ஆயரின் பங்குத் தளச் சந்திப்பினால், இறை சமூகம் புதுப்பிக்கப்படுகின்றது. அதற்கான கூட்டுத் தயாரிப்பு மிகமிகத் தேவையென்பதைத் தெளிவுபெற உணர்ந்தே இவ்வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதனை உளமார உணர்ந்து செயலாற்றுவது அனைவரின் கடமையாகும்.
குறிப்பு : பங்கு தளச் சந்திப்புக்கு வரும் ஆயருடன் நுழைவு வழிபாடு நடத்த ஆசியுரைகளும் மந்திரிப்புகளும் எனும் நூலில் பார்க்கவும்.
|