Holy Ghost Church
Vembar


Parish Name : Holy Ghost Church
Address : Vembar, 628 906, Tuticorin Dt.
Patron Saint : Holy Ghost
Telephone No : 04638 - 262426
A Brief History :
பாண்டிய நாடு முத்துடைத்தது என்ற ஒளவையின் வாக்கிற்கேற்ப தென்பாண்டிக்கடலில் கிடைத்த முத்துக்களே பாண்டிய பேரரசுக்கு பொருளாதாரத்தை அள்ளிதந்தன. இம்முத்துக்கள் செறிந்து கிடந்த பகுதியே தற்போதைய மன்னார் வளைகுடாவின் முத்துக்குளித்துறையாகும். இம்முத்துக்குளித்துறையின் மிக முக்கிய ஊராக விளங்குவது வேம்பாறு என்னும் பழம் பெரும் ஊராகும். கடல்படு திரவியமாம் இம்முத்தினை ஆழியில் மூழ்கி கரை சேர்த்தவர்கள் தென்பரதவர்கள் என்னும் பரத குலத்தோர் ஆவார். இவர்களே இவ்வூரின் பூர்வ குடிகளாவர்.
முத்து வணிக்கத்தைப் பார்வையிட வந்த பாண்டிய மன்னனுக்கு இவ்வூர் சேர்ப்பனாம் அடப்பனார் வேம்பினால் மாலை அணிவித்து மகிழ்ந்ததால் இவ்வூருக்கு வேம்பாரம் என அழைத்து பின்னாளில் வேம்பாறு என மருவியதாக வரலாறு கூறுகிறது இவ்வூருக்கு நிம்பநகர் எனும் பெயரும் உள்ளது. நிம்பன், வேம்பன் என்பது பாண்டியனைக் குறிக்கும் சொல் என்பதை அறிஞர்கள் அறிவர். காங்கேயன் புலவர் பாண்டியனை 'வேம்பார் புயத்தோன் மீனவர் கோன்' எனக் குறிப்பிடுகிறார். எனவே பாண்டியரோடு நேரடி தொடர்பில் இருந்த ஊர் இவ்வூர் என்பதை இதன் மூலம் அறியலாம்.
பாண்டியரின் வீழ்ச்சிக்கு பின்னர் பாண்டிய நாடு சுல்தான்கள் மற்றும் நாயக்கர்களின் ஆளுகைக்கு உட்பட்டது. பல்வேறு சிற்றரசுகளும், பாளையங்களும் உருவாகி சிதறுண்டது. இதனால் முத்துக்குளித்துறை மூன்று தலைவர்களால் ஆளப்பட்டது. இதனிடையே முத்தெடுக்கும் உரிமையை மூர்கள் குத்தகைக்கு எடுத்துக் கொண்டனர். இதனால் பல்வேறு பிணக்குகள் தோன்றின. முத்தெடுக்கும் உரிமையை முத்தெடுக்கும் உரிமையை மீண்டும் பெற்றுக் கொள்ளவும், பிணக்குகளை தீர்த்துக் கொள்ளவும் போர்த்துக்கீசியரின் உதவியை இப்பரத குல மக்கள் நாடினார்.
போர்த்துகீசியாருடன் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி கத்தோலிக்க திருமறையை தழுவ முன்வந்தனர். அதன்படி வேம்பாறினைச் சேர்ந்த பரதகுல மக்கள் 1536 ஆம் ஆண்டு கத்தோலிக்க திருமறையைத் தழுவினர் அன்று முதல் இன்று வரை தூத்துக்குடி மறைமாவட்டத்தின் முத்துக்குளித்துறை மண்டலத்தின் பழமையான பங்குகளில் வேம்பாறு தூய ஆவினானவர் ஆலயப் பங்கும் (1604) ஒன்றாக விளங்குகிறது. முத்துக்குளித்துறைப் பகுதியில் கிறிஸ்தவம் தழுவிய பரத குல மக்களுக்காக சமயப்பணியாற்ற 1542 ஆம் ஆண்டு வந்த புனித சவேரியார் வேம்பாறுக்கு பலமுறை வந்திருப்பதுடன் தமது கடிதங்கள் பலவற்றிலும் இவ்வூரைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இவ்வூர் மக்களை அதிகம் அன்பு செய்வதாகவும் தமது கடிதத்தில் குறிப்பிடுகிறார்.
பெரிய தகப்பன் புனித சவேரியார் வேம்பாறில் குளத்தில் விழுந்து இறந்த சிறுமிக்கு உயிரளித்து புதுமை நிகழ்த்தியுள்ளார். இப்புதுமை புனித சவேரியாருக்கு புனிதர் பட்டம் வழங்க பெறப்பட்ட சாட்சியங்களுள் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த சாட்சியத்தை ஜான் ஆர்தியாகோ என்னும் போர்த்துக்கீசியர் வழங்கினார் என்று சங் ஜார்ஜ் சுராமர் அடிகளாரும், மன்னாரைச் சேர்ந்த ஜெரால்டு மிராந்தா என சிலரும் கூறுவர் என சங். வெனான்ஸியூஸ் அடிகளாரும் குறிப்பிடுகிறார்.
தமிழின் அச்சுத் தந்தை எனப்படும் அருட்தந்தை. ஹென்றிக் ஹென்றிக்ஸ் அடிகளார் 1548ம் ஆண்டு உரோமையிலிருந்த சேசு சபைத்தலைவர் புனித இஞ்ஞாசியாருக்கு எழுதிய கடிதத்தில் வேம்பாறில் தங்கியிருந்து தமிழ் படித்து வந்ததாகவும், வேம்பாறு ஆலயத்தில் ஞாயிறுதோறும் கிறிஸ்தவ கோட்பாடுகளை விளக்கி வருவதாகவும், மக்கள் ஆர்வமுடன் கேட்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புனித சவேரியார் காலத்தில் உருவான கூரைக் கோயிலுக்குப் பின் 1571ம் ஆண்டு இங்கு முதன்முதலாக கற்கோவில் கட்டப்பட்டது. 1600ம் ஆண்டு வெளியான சேசு சபையினர் அறிக்கையில் கடற்கரை கிராமங்களில் கட்டப்பட்டுள்ள ஆலயங்களில் வேம்பாறு ஆலயம் தான் பெரியதாகவும், நேர்த்தியாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே முத்துக்குளித்துறையின் முதல் கற்கோவிலாகும். 1604 ஆம் ஆண்டு வெளியான முத்துக்குளித்துறையின் முதல் பங்கு பட்டியலில் வேம்பாறு இடம்பெற்றுள்ளது.
வேம்பாறின் பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை ஆன்ட்ரூ லோபஸ் அடிகளார் 1644ம் ஆண்டு எழுதியுள்ள மடலில் இந்த ஆலயம் இஸ்பிரித்து சாந்துவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகவும், 1300 கிறிஸ்தவர்கள் வசிப்பதாகவும் பதிவு செய்துள்ளார்.
1658ம் ஆண்டு முத்து குளித்துறையை கைப்பற்றிய டச்சுக்காரர்கள் கால்வீனிய சபையை சார்ந்தவர்களாதலால் வேம்பாறில் இருந்த பெருங்கோவிலின் முகப்பு மற்றும் பீடத்தை இடித்து விட்டு அவர்களது ஆயுத கிடங்காக மாற்றினர். சேசுசபைக் குருக்களை கோவிலிலிருந்து அகற்றினர். அவர்கள் தலைமறைவாக காடுகளுக்குள், உள் நாட்டுப்பகுதியில் சென்று பணியாற்றும் சூழல் உருவாக்கினார். ஐம்பது ஆண்டுகள் கழித்து அதாவது 1708ம் ஆண்டு அருட்தந்தை. மனுவேல் கர்னியாரோ வேம்பாரின் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார். 1713ம் ஆண்டு வேம்பாரின் பங்குத்தந்தையான அருட்தந்தை ஜோசப் காலினி தனது மடலில் பெரிய கோவில் மிகவும் சிதிலமடைந்து அழிந்து வருவதாக எழுதியுள்ளார். 1739 ல் இவ்வாலயம் முழுவதுமாக அழிந்தது.
இந்நிலையில் 1709ம் ஆண்டு கொடிய பிளேக் நோய் வேம்பாறைத் தாக்கியது. பங்குத்தந்தை அருட்தந்தை. மனுவேல் கர்னியாரோ உட்பட பலர் பாதிக்கப்பட்டனர். பல உயிரிழப்பு ஏற்பட்டது. அதற்கு அடுத்த வருடம், 1710 ம் ஆண்டு அருகே இருந்த குறுநில மன்னர்களால் படையெடுப்பு நடந்தது. கடும் பஞ்சம் ஏற்பட்டது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பஞ்சம், படை, கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்ட இவ்வூர் மக்கள் புனித செபஸ்தியாரை தங்கள் பாதுகாவலராக தேர்ந்து கொண்டனர். நாளடைவில் அவர் மீதிருந்த பக்தி முயற்சிகள் விரிவடைந்தது. 1934 ஆம் ஆண்டு புனித செபஸ்தியாரின் அருளிக்கம் முதன் முதலாக இவ்வாலயத்திற்கு வந்து சேர்ந்தது.
அருட்தந்தை. ஹென்றிக் ஹென்றிக்ஸ், அருட்தந்தை பால்தசார் டி கோஸ்தா, அருட்தந்தை. ஜோசப் கான்ஸ்டைன் பெஸ்கி (வீரமாமுனிவர்) போன்ற எண்ணற்ற சேசுசபைக் குருக்கள் இப்பங்கில் தங்கியிருந்து தங்கியிருந்து தமிழ் பயின்றனர். 1742,43 ஆகிய ஆண்டுகளில் வீரமாமுனிவர் என்ற அருட்தந்தை. ஜோசப் கான்ஸ்டைன் பெஸ்கி அவர்கள் இப்பங்கில் பணியாற்றினார்கள். இவ்வாலய இவ்வாலய கணக்குப் புத்தகத்தில் வீரமாமுனிவரின் கையெழுத்து இருந்ததைக் கண்டதாக அருட்தந்தை கெளசானல் தமது கடிதத்தில் குறிப்பிடுகிறார். அருட்தந்தை. இராபர்ட் தே நோபிலி, அருட்தந்தை ஜான் டி பிரிட்டோ போன்றவர்களின் பாதம் வருடிய புண்ணிய பூமி இது.
1876 ஆம் ஆண்டிலிருந்து அருட்தந்தை பங்காரு சே.ச அடிகளாரின் காலத்திலிருந்து தெற்கே புதுக்கோட்டை, தருவைக்குளம்; மேற்கே மணியாச்சி கொம்பாடி; வடக்கே புதூர், நாகலாபுரம் என 60 ஊர்கள் இணைந்த பெரிய மறைபரப்புத் தளமாக (VEMBAR MISSION) வேம்பாறு விளங்கியது. 1908 ஆம் ஆண்டிலிருந்து வேம்பாறின் இணை ஊர்கள் தூத்துக்குடியோடு ஒன்றன்பின் ஒன்றாக இணைக்கப் பட்டன. 1914ம் ஆண்டு வேம்பாரில் 4.744 கிறிஸ்தவர்கள் வசித்து வந்ததாக சேசு சபை வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரமாமுனிவரால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் வேம்பாறில் இருந்த ஆலயம் சேதமடைய ஆரம்பித்தது.
புதிய ஆலயம் (தற்போதைய ஆலயம்) கட்டுவதற்கான அஸ்திவாரம் 1903ம் ஆண்டு இடப்பட்டது. 1915ம் வருடம் பெப்ருவரி மாதம் முதல் தேதியன்று பங்குத்தந்தை சுவாமிநாதர் முன்னிலையில், திருச்சி ஆயர் மேதகு அகுஸ்தின் பெசாந்தியார் ஆண்டகையால் அர்ச்சிக்கப்பட்டு, பரிசுத்த ஆவிக்கு அர்ப்பணிக்கப் பட்டது. 1967 ஆம் ஆண்டு இப்பங்கின் சிறப்பு பாதுகாவலராம் புனித செபஸ்தியாரின் திருத்தலம் மேதகு தாமஸ் பர்னாந்து ஆண்டகை அவர்களால் நேர்ந்தளிக்கப்பட்டது. தற்போதைய ஆலயம் கட்டப்பட்டதன் நூற்றாண்டு விழா நினைவாக ஆலய முன்மண்டபம் அருட்தந்தை ஜான் பென்சன் பணிக்காலத்தில் கட்டப்பட்டு 20.01.2015 அன்று அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.
செல்வ செழிப்பின் காரணமாக நாயக்கர்கள் மற்றும் சேதுபதிகளின் படையெடுப்புகளால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். முத்துக்குளித்தலிலும் கடல் வாணிபத்திலும் கோலோச்சி பெரும் செல்வந்தர்களாக விளங்கிய இம்மக்கள் பல்வேறு நாடுகளில் குடியேறினர் குறிப்பாக இவர்கள் இலங்கையின் மன்னார், நீர்கொழும்பு, கொழும்பு மற்றும் யாழ்பாணம் போன்ற பகுதிகளில் குடியேறி வணிகம் மூலம் இலங்கை தேசத்தை வளமையடைய செய்து வருகின்றனர். தற்போதைய இலங்கை மன்னார் மறைமாவட்டத்தின் ஆயர் மேதகு இம்மானுவேல் பர்னாந்து அவர்கள் வேம்பாறினை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.
படிப்பு, தொழில் காரணமாக வெளியூர் சென்ற நிம்பவாசிகள் நிரந்தரமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தங்கி பல்வேறு ஆலயங்களை எழுப்பியுள்ளனர். தற்போது ஊரின் பெருமை காக்க 150 பரதவ குடும்பங்களே இங்குள்ளன எனினும் தங்களுக்கே உரிய மிடுக்குடன் வாழ்ந்து வருகிறார்கள். பல்வேறு சமய, இன மக்கள் வாழ்ந்து வந்தாலும் இந்தாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஊராட்சி மன்ற தேர்தலில் தலைமைப் பொறுப்பை பிற மத சகோதரர்களுக்கும் பங்கிட்டு வருவது வேறெந்த கடற்கரை கிராமங்களிலும் காணாத ஒன்றாகும்.
Succession of parish priest:
St. Francis Xavier
1. Fr. Henry Hendricks
2. Fr. Franciaco Durao (1574)
3. Fr. Bernard De Almeida (1604)
4. Fr. Gaspar de Abrew (1607)
5. Fr. Fernand Gomez (1608)
6. Fr. Nicolas Paludanus (1608)
7. Fr. Louis Mathew Pelingotti (1608)
8. Fr. Andrew Lopez (1623)
9. Fr. Antoine Velosc (1626)
10. Fr. Balthazar de Costa (1636)
11. Fr. Manuel Carneire (Vembar & Vaipar) (1708)
12. Fr. Alexander Joseph calini (1709)
13. Fr. Manuel Dos Reys (Vembar, Vaipar,Mookoor) (1733)
14. Fr. Salvador de Costa (1738)
15. Fr. Francis Xavier Stocker (1742)
Fr. Joseph Constantine Beschi (1742)
16. Fr. Joseph Khrening (1743)
17. Fr. Anthony Maria Carisola (1743)
18. Fr. Charles Fortini (1745) 19. Fr. Matthew Lopez (1752--)
20. Fr. Xavier Bangarou (1875)
Fr. Constant Dayirias (Ass. PP) 21. Fr. Michael (1876)
Fr. Pouget (Ass. PP) (1878)
22. Fr. Pouget (1879)
Frs. Berthiew, Giuge (Ass. PP)
23. Fr. P. X. Rayapar (1882)
24. Fr. Regis Calien (1887)
Fr. Dayiriam (Ass PP)
25. Fr. Adaikalanathar (1889)
Frs. Rayapar, Causanal, Cortes (As PP)
26. Fr. Adrian Boyisset (1894)
Frs. Berthiew, Visuvasam, Rayapar, Talon (Ass PP)
27. Fr. Paranchothi (1897)
Fr. Saminather (Ass PP)
28. Fr. Saminather (1901)
Frs. Gnsnasamy, Mariadas (Ass PP) (1903)
Fr. Soosai Manikam (Ass PP) (1904)
Fr. Gnanapragasam (Ass PP) (1906)
Fr. Siluvai Michael (Ass PP) (1907)
Fr. Lourdes (Ass PP) (1911)
29. Fr. Mariadas (1919) P. J.
30. Fr. S. Mariadas (1923)
31. Fr. Religius Missier (1928)
32. Fr. G. Michael (1933)
33. Fr. Edward Christian Fernandez (1938)
34. Fr. A. Michael (1946)
35. Fr. Rosary Corera (1947)
36. Fr. Periyanayagam (1950 six months)
37. Fr. X. Fernando (1950)
38. Fr. Venantius Fernando (1951)
39. Fr. Maria Viyagulam (1955 six months)
40. Fr. Anthony Arakal (1955)
41. Fr. T. Paul Alangaram (1957)
42. Fr. G. Soosainather (1960)
43. Fr. Liguori Fernando (1971)
44. Fr. Rubert Arulvalan (1972)
45. Fr. Benzigar - 1973 - 1976
46. Fr. Paul Alangaram - 1976 - 1977
47. Fr. Viagula Marian - 1977 – 1979
48. Fr. Vladmir Rayan - 1979 – 1982
49. Fr. Deva Sahayam - 1982 – 1984
50. Fr. Louis - 1984 – 1985
51. Fr. Xavier Ignatius Amirtham - 1985 – 1988
52. Fr. Jesu Arulappan - 1988 – 1991
53. Fr. Arul Mani - 1991 – 1993
54. Fr. Alexander - 1993 – 1998
55. Fr. Job De Rose - 1998 – 2003
56. Fr. Venantius Fernando - 2003 – 2004
57. Fr. Ranjith Kumar - 2004 – 2009
58. Fr. Jesu Nazarene - 2009 – 2010
59. Fr. Joseph Rathinaraj - 2010 –
60. Fr. Antony Jegathesan - 2010 – 2012
61. Fr. Benson - 2012 - 2015
62. Fr. Sahayaraj Valdharis D. 2015 - 2017
63. Fr. Prathiban Liphonse 2017 - 2018
64. Fr. Raja Rodrigo 2018 - 2021
65. Fr. Antony Titus Roshan 2021 -
திருவிழாக்கள்:
பங்குத் திருவிழா: பெந்தேகோஸ்து திருவிழா (ஈஸ்டர் முடிந்த ஐம்பதாவது நாள்) பாதுகாவலர் புனித செபஸ்தியார் திருவிழா : ஜனவரி 20 ம் தேதி.
செபஸ்தியார் திருத்தல திருவிழா : ஜனவரி 21 ம் தேதி.
புனித அந்தோணியார் சிற்றாலய திருவிழா: செப்டம்பர் மாதத்தின் இரண்டாம் செவ்வாய்க்கிழமை
பங்கில் உள்ள திருத்தலம், சிற்றாலயம், கெபி:
1. புனித செபஸ்தியார் திருத்தலம்
2. புனித அந்தோணியார் சிற்றாலயம்
3. புனித பாத்திமா மாதா கெபி
4. புனித சூசையப்பர் கெபி.
5. பேருந்து நிலைய புனித செபஸ்தியார் சதுக்க கெபி.
பங்கின் பங்கேற்பு அமைப்புகள் :
1. மறைக்கல்வி
2. பாலர்சபை
3. நற்கருணை வீரர் சபை
4. அமலோற்பவ மாதா இளம் பெண்கள் சபை
5. புனித வின்சென்ட் தே பவுல் சபை
6. மரியாயின் சேனை
7. பொம்மை மாதா சபை
8. திருக்குடும்ப சபை
9. உதயதாரகை இளைஞர் இயக்கம்
10. அன்பியம் - 6
No. of Catholic Families : 147
Sunday Mass – Timings : 6.00 a.m.; 7.30 a.m
Institutions under the Parish
St. Sebasthiar Middle School, Vembar – 628 906
Religious
Congregation of the Mother of Sorrows, Servants of Mary (OSM)
Servite Convent, Holy Ghost Church, Vembar – 628 906 Tel: 04638 – 262364
Institutions under the Religious
St. Joseph’s Home for Children, Vembar – 628 906 (OSM)
=================
New Info provided by : Rev.Fr. Antony Titus Roshan
Scanned pages 1 - 5, Previous file name : parish-vembar-holy-ghost0.htm
Updated on 15th Jan. 2023
|