image
image
image

Viagula Annai Shrine
Malayankulam

as

as

as

as

Parish Name : St. Viagula Annai Shrine
Address : Malayankulam, Tirunelveli Dt. 627 151
Patron Saint : Viagula Annai
Telephone No : 04635 -256141

A Brief History :

விரும்பும் வரம் தரும் வியத்தகு வியாகுல அன்னை ஆலயம்

வியத்தகு வியாகுல அன்னை திருத்தலம், மலையன்குளம்
திருநெல்வேலி - கன்னியாகுமரி நான்குவழிச் சாலையில் மூன்றடைப்பு என்னும் ஊரிலிருந்து 5 கிலோமீட்டர் கிழக்குப் புறமாக அமைந்த சிற்றூர் மலையன்குளம். தங்கள் தொழிலின் பொருட்டு பல ஊர்களிலிருந்து புலம்பெயர்ந்து வந்த கத்தோலிக்கர்கள் மலையன்குளம், தெய்வநாயகப்பேரி என்னும் சிற்றூர்களில் வசிக்கத் தொடங்கினர்.

1880களில் இரண்டு ஊர்களுக்கும் நடுவே இயேசுவின் திருஇருதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட குருசடி போன்ற ஓலைக்குடிசைக் கோயிலைக் கட்டி அங்கு செபித்து வந்தனர். பின்னர் 1903ஆம் ஆண்டு தற்போதைய வியத்தகு வியாகுல அன்னை ஆலயம் கட்டப்பட்டது. தொடக்க காலத்தில் திருச்சிராப்பள்ளி மறைமாவட்டத்திலும், 1923 முதல் தூத்துக்குடி மறைமாவட்டத்திலும் இருந்த அணைக்கரை பங்கின் கிளைப்பங்காக மலையன்குளம் இருந்தது. 1937 மே மாதம் முதல் நாள் அணைக்கரையிலிருந்து நாங்குநேரி புதிய பங்காக உருவான பின்னர், நாங்குநேரி பங்கின் கிளைப்பங்காக இருந்தது.

1999 மே மாதம் 28ஆம் நாள் தூத்துக்குடி மறைமாவட்டத்தின் 96ஆவது பங்காக அந்நாள் ஆயர் மேதகு அமல்நாதர் ஆண்டகையவர்களால் உருவாக்கப்பட்டது. சகாயபுரம், மருதகுளம், தோட்டாக்குடி, பத்தினிப்பாறை, பானான்குளம், வடக்கு மீனவன்குளம், தெற்கு மீனவன்குளம், மேல துவரைக்குளம், பொத்தை சுத்தி, இடையன்குளம், எருக்கலப்பட்டி ஆகிய 11 ஊர்கள் மலையன்குளம் பங்கின் கிளைப்பங்குகளாக இருந்தன. ஒருசில ஆண்டுகளில் சிந்தாமணி பங்கின் கிளைப்பங்கான நெல்லையப்பபுரம் மலையன்குளம் பங்கோடு இணைக்கப்பட்டது. 2003 மே 28ஆம் நாள் மலையன்குளம் இறைவார்த்தை சபை அருள்தந்தையர்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது. 2010 மே 13ஆம் நாள் முதல் மீண்டும் தூத்துக்குடி மறைமாவட்ட அருள்தந்தையர்களால் வழிநடத்தப்பட்டு வருகின்றது.

கால ஓட்டத்தில் மீனவன்குளம் தனிப்பங்கானது. மலையன்குளம் பங்கின் கிளைப்பங்குகளில் பல புதிய மீனவன்குளம் பங்கோடு இணைந்தன. தற்போது நெல்லையப்பபுரம், பத்தினிப்பாறை, சகாயபுரம், தோட்டாக்குடி ஆகிய நான்கு கிளைப்பங்குகளுடன் மலையன்குளம் பங்கு செயல்பட்டு வருகின்றது.

இறைவார்த்தை சபை அருள்தந்தையர்களின் பெருமுயற்சியால் பல ஊர்களிலிருந்தும் மக்கள் தேடி வரும் இடமாக மலையன்குளம் மாறியது. 2005ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று வியாகுல அன்னை சமையல் பணியாளர் திரு. முருகன் என்பவருக்குக் காட்சி தந்து அரிசி அள்ளித்தந்த அற்புதம் நடைபெற்ற பின்னர், மலையன்குளம் வரும் திருப்பயணிகளின் எண்ணிக்கை அதிகமானது. தூத்துக்குடி மறைமாவட்டம் மலையன்குளம், வியாகுல அன்னை ஆலயத்தை திருத்தலமாக அங்கீகரித்தது.

இறைவார்த்தை சபை அருள்பணியாளர்கள் மக்களின் பல்வேறு தேவைகளுக்காக உருவாக்கிய மகிமை மண்டபம் திருப்பயணிகளின் வசதிக்காக மகிமை ஆலயமாக மாற்றியமைக்கப்பட்டது. அன்னையின் அற்புதக் காட்சியை நினைவுகூரும் வித்தில் காட்சிதந்த அதே இடத்தில் புதுமைக் கெபியும் கட்டப்பட்டுள்ளது. பங்கின் பிற ஆன்மீகத் தேவைகளுக்hக அப்போஸ்தல இராக்கினி சபை அருள்சகோதரிகளும் பணியாற்றி வருகின்றனர்.
கிளைப்பங்கு ஆலயங்கள்

1. புனித அந்தோணியார் ஆலயம், நெல்லையப்பபுரம்
இவ்வூரின் பூர்வீகக் குடிகள் இந்து மதத்தைச் சார்ந்த உழவுத்தொழிலாளர்கள். தமிழகத்தில் நிலவுடைமை முறை பழக்கத்தில் இருந்தபோது, 12 கிராமங்களை உடைமையாகக் கொண்ட கோபி பண்ணையார் என்பவரது வயலில் பணியாற்றுவதற்காக அழைத்து வரப்பட்டவர்கள் நெல்லையப்பபுரம் ஊரின் பூர்வீகக் குடிகளோடு இணைந்து இவ்வூரில் வாழ்ந்து வந்தனர். பண்ணையார் ஆதிக்கம், குறைந்த கூலி என பல சமூக நெருக்கடிகளால் இன்னலுற்ற மக்கள் தங்கள் துன்பங்களிலிருந்து விடுபட கிறித்தவர்களாக மாறினர். அன்று முதல் சிந்தாமணி பங்கின் கிளைப்பங்காக நெல்லையப்பபுரம் இருந்தது. தங்கள் ஆன்மீக வசதிக்காக புதிய ஆலயம் ஒன்றைக் கட்டி, அதனை புனித அந்தோணியாருக்கு அர்ப்பணித்தனர். மேதகு ஆயர் அம்புரோஸ் அவர்களால் 1978ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் நாள் ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது. 2004ஆம் ஆண்டு முதல் மலையன்குளம் பங்கின் கிளைப்பங்காக செயல்பட்டு வருகின்றது.

2. புனித முடியப்பர் ஆலயம், தோட்டாக்குடி
தோட்டாக்குடியில் வசித்து வந்த மக்கள் தொடக்கத்தில் இந்து சமயத்தைச் சாhந்தவர்களாக இருந்தனர். 1933இல் ஊரின் முதல் கிறித்தவராக அருள்தந்தை ஸ்டீபன்தாஸ் திருமுழுக்குப் பெற்றார். அவரது உபகாரியான அருள்சகோதரி அட்ராக்டா என்பவரின் உதவியால் புனித முடியப்பர் ஆலயம் உருவானது. தொடர்ந்து ஒருசில குடும்பங்கள் திருமுழுக்குப் பெற்று, கிறித்தவ மறையில் இணைந்தனர். அதுமுதல் நாங்குநேரி பங்கிலும், பின்னாளில் மலையன்குளம் பங்கிலும் கிளைப்பங்காக தோட்டாக்குடி உள்ளது.

3. இடைவிடா சகாய அன்னை ஆலயம், சகாயபுரம்
அம்பூரணி சாத்தான்குளம் என்ற பெயரில் இருந்த ஊரில் அருகிலிருந்த பண்ணையார்களின் வயலில் வேலைபார்த்து வந்த விவசாயத் தொழிலாளர்கள் குடியிருந்தனர். பல்வேறு சமூக நெருக்கடிகளால் இன்னலுற்ற மக்கள் தங்கள் துன்பங்களிலிருந்து விடுபட கிறித்தவர்களாக மாறினர். 1977ஆம் ஆண்டு அப்போதைய நாங்குநேரி பங்குத்தந்தை அருள்தந்தை ஆர்தர் ஜேம்ஸ் அவர்களால் திருமுழுக்குப் பெற்று கிறித்தவர்களாயினர். ஊரின் பெயர் சகாயபுரம் என மாற்றப்பட்டு, சகாய அன்னையின் பெயரால் ஆலயமும் உருவானது. மலையன்குளம் தனிப்பங்கான பின், மலையன்குளத்தின் கிளைப்பங்காக இவ்வூர் செயல்பட்டு வருகின்றது. தற்போதைய புதிய ஆலயம் அருள்தந்தை ஜஸ்டின் அவர்களது முயற்சியால் 2020 மே மாதம் 25ஆம் நாள் அர்ச்சிக்கப்பட்டது.

4. புனித லூர்து அன்னை ஆலயம், பத்தினிப்பாறை
பத்தினிப் பாறையிலுள்ள மக்கள் அனைவருமே கிறித்தவ மறையைச் சார்ந்தவர்கள். ஒருசில குடும்பங்கள் ஊஆளு திருஅவையைச் சார்ந்திருந்தாலும், பெரும்பாலான மக்கள் கத்தோலிக்க மறையைச் சார்ந்தவர்களே. தொடக்கத்தில் நாங்குநேரி பங்கிலும், பின்னாளில் மலையன்குளம் பங்கிலும் கிளைப்பங்காக பத்தினிப்பாறை உள்ளது. மணப்பாட்டைச் சார்ந்த திரு. அந்தோணி கோஸ்தா அவர்களால் கட்டப்பட்ட புனித லூர்து அன்னை ஆலயம் பத்தினிப்பாறை மக்களின் ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்றி வருகின்றது.

Succession of parish priests:
1. Rev.Fr. Jerosin A. Kattar - 1999 – 2002
2. Rev.Fr. Vijay Amalraj SVD - 2002 - 2005
3. Rev.Fr. Kulanthaisamy SVD - 2005 - 2008
4. Rev.Fr. Arockiadas SVD - 2008 - 2009
5. Rev.Fr. Arockiasamy SVD - 2009 - 2010
6. Rev.Fr. Jeyakumar - 2010
7. Rev.Fr. Rathinaraj - 2010 - 2013
8. Rev.Fr. Victor M.G - 2013 - 2018
9. Rev.Fr. Justin 2018 -

Grottos in the parish: NIL

Catholic Population : 1250

No. of Catholic Families : 190

Sunday Mass – Timings : 5.30 a.m.; 7 a.m.; 6.30p.m
Weekdays : 6.00 a.m

Sub – Stations
1. Sahayapuram – Sahaya Matha
2. Nellaiyappapuram – St. Antony
3. Pathiniparai – Our Lady of Lourdes
4. Thottakudi – St. Stephen

Participatory Structures
1. Parish Finance Committee

Christian Life Societies (Pious Associations)
1. Matha Sodality

Other Associations & Activities
1. Mahalir Mantram

Institutions under the Parish
R.C. Nirmala Primary School, Malayankulam – 627 151 A. Sathankulam P.O
St. Antony’s Primary School, Nellaiyappapuram – 627 151

Religious
Missionary Sisters of the Queen of the Apostles (SRA)
Apostolic Rakkhini Convent, Malayankulam – 627 151 Maruthakulam P.O
Tel. 04635 – 256367

Institutions under the Religious
Apostola Rakkini Dispensary, Malayankulam – 627 151 Maruthakulam P.O. (SRA)

===============
New History in Tamil received through whatsapp by : Rev. Fr. Justin
Previous file name : parish-malayankulam-viyagula-annai0.htm
Updated on 3rd May 2023




 


image